பள்ளியில் ஒரு நாய்க்குட்டி [Palliyil Oru Naaikkutti]
Sundara Ramaswamy பள்ளியில் ஒரு நாய்க்குட்டி என்பது சுந்தர ராமசாமி எழுதிய சிறுகதைகளில் சிலவற்றின் தொகுப்பு. காலச்சுவடு வெளியீடாக இப்புத்தகம் 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இத்தொகுப்பில் 7 சிறுகதைகள் உள்ளன. இந்த 7 சிறுகதைகளில் ஒரு கதைக்கு மட்டும் தலைப்பு கொடுக்கப்படவில்லை. அக்கதையானது தலைப்புப் போடாத கதை எனக்குறிப்பிட்டு வெளிவந்துள்ளது. சில சிறுகதைகள் முற்றுப் பெறாத நிலையில் இருக்கின்றன. சுந்தர ராமசாமி மறைந்த பிறகு அவரது நாட்குறிப்பேட்டில் அவர் எழுதியிருந்த முழுமை பெற்ற மற்றும் முழுமை பெறாத சிறுகதைகளின் தொகுப்பு இது. இப்புத்தகத்தின் பதிப்புரிமை சுந்தர ராமசாமி அவர்களின் மனைவி கமலா ராமசாமி அவர்களுடையது. இத்தொகுப்புகளிலுள்ள சிறுகதைகளில் ஒன்றான பள்ளியில் ஒரு நாய்க்குட்டி எனபதுவே இத்தொகுப்பின் பெயராக சூட்டப்பட்டுள்ளது. இத்தொகுப்பிற்கு அரவிந்தன் முன்னுரை எழுதியுள்ளார்.
தொகுப்பிலுள்ள சிறுகதைகள்[தொகு]
புலமையின் அம்மணம்
பெயர் தெரியாத மரம்
பள்ளியில் ஒரு நாய்க்குட்டி
சாத்துவதும் திறப்பதும்
இரு நண்பர்கள்
(தலைப்புப் போடாத கதை)
கிங்காங்கும் தாராசிங்கும்
Genres:
160 Pages